பிரபல கன்னட இயக்குநரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் மற்றும் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் கேஜிஎப் . இப்படமானது இரண்டு பாகங்களாக வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருப்பதோடு இந்தப் படம் 1400 கோடி ரூபாய் வசூலை தாண்டி தொடர் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. படம் வெளியான முதல் 4 நாட்களிலேயே சர்வதேச அளவில் 500 கோடி ரூபாய் வசூலை எட்டியது.
தற்போது இந்தப் படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடி வருகிறது.சென்டிமெண்ட், ஆக்ஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நிறைவாக கொடுத்த இப்படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் கேஜிஎப் சாப்டர் 2 படம் வெளியாகி திரையரங்குகளில் 100 நாட்களை கடந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படக்குழுவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. விரைவில் கேஜிஎப் சாப்டர் 3 படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், அதன் அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகின்றது.
பிற செய்திகள்
- அவர் ஒரு குளோபல் ஸ்டார்- பிரபல நிகழ்ச்சி ஒன்றில் தனுஷைப் புகழ்ந்த சமந்தா
- இயக்குநர் செல்வராகவன் வீட்டில் நடைபெற்ற துயர சம்பவம்- இரங்கல் தகவலைப் பதிவிட்ட அவரது மனைவி
- முக்கிய இயக்குநர்கள் பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிய அஜித்- அட இவ்வளவு நாளாக இது தெரியாமல் போச்சே
- குக்வித் கோமாளி சீசன் 3இன் டைட்டில் வின்னருக்கு வழங்கப்பட்ட பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!