தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்ட லியோ திரைப்படம். பட்டிதொட்டி எல்லாம் பார்வையிட்டு ரசிகர்களிடத்திலும், பார்வையாளர்கள் மற்றும் சினிமா திரை உலகினரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வாறு இருக்கவே லியோ திரைப்பட தயாரிப்பாளர் லலித்குமார் கூறிய விடையம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தட், அர்ஜுன் போன்ற பலர் நடித்திருக்கும் லியோ திரைப்படம் கடந்த வியாழன் வெளியானது. லியோ படத்திற்கு இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகளவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியாவதற்கு முன்னரே பல வசூல் சாதனையை செய்துள்ளது லியோ திரைப்படம்.
தளபதியின் 67வது படமான லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆகி தற்போது செம ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் லியோ படம் ஆயிரம் கோடி வசூல் செய்யாது என கூறியுள்ளார். இந்த விடயமானது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .லியோ படம் இதற்குமுன் பிற படங்கள் செய்த வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ படத்தின் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்தது. படம் வெளியான ஒரே நாளில் 140 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதே ஸ்பீடில் போனால், ஜவான் செய்த வசூலையே முறியடித்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் லியோ படத்தின் தயாரிப்பாளர் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் அவர் அவ்வாறு கூறினார் என்ற கேள்வியும் தற்போது ரசிகர்கள் மத்தில் பரவி வருகிறது.
Listen News!