• Sep 20 2024

நடிகை சிம்ரனுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் 14 வயதுச் சிறுவர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மக்கள் மத்தியில் பிரபலமான ஹிந்தி திரையுலக சின்னத்திரை நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை சிம்ரன் புதரூப்.

"பாண்டியா ஸ்டோர்" என்ற சீரியலின் மூலம் பல ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை சிம்ரன் புதரூப். தமிழில் "பாண்டியன் ஸ்டோர்" என்ற பெயரில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடரே ஹிந்தியில் "பாண்டியா ஸ்டோர்" என்ற பெயரில் ரீமேக் செய்து ஒளிபரப்பப்படுகிறது.

இந்தத் தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்ற நடிகை சிம்ரன் புதரூப் தனக்கு பாலியல் மிரடடல்கள் வருவதாக கூறியுள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் "சீரியலில் நான் வில்லியாக நடிப்பதை சிலரால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. நான் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால் தற்போது அது எல்லைமீறிப் போய்விட்டது. என்னைப் பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்போவதாக மிரட்டுகின்றனர். என்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசுகின்றனர். இதனால் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றினை அளித்துள்ளேன்." என்றார்.

மேலும் "எனக்கு மிரட்டல் விடுப்பவர்கள் 14 வயது சிறுவர்கள். அவர்களுக்கு பெற்றோர்கள் படிப்பதற்காக வாங்கிக் கொடுத்துள்ள மொபைல் போனை தவறாகப் பயன்படுத்துகின்றனர். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகை சிம்ரன் புதரூப்பின் இந்தப் புகார் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement