இந்தித் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் 41வயதான நடிகை சந்திரிகா சாஹா. அந்தவகையில் இவை சப்னே சுஹானே லடக்பான் கே' 'அதாலத்', 'சி.ஐ.டி. மற்றும் 'சவ்தான் இந்தியா: கிரைம் அலர்ட்' உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஏற்கெனவே விவாகரத்து பெற்ற சந்திரிகா 2020 இல் தொழில் அதிபரான 21வயது அமன் மிஸ்ராவை சந்தித்து அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அந்த சமயத்தில் சந்திரிகா கர்ப்பமாக இருப்பதை அறிந்த அமன், சந்திரிகாவை கருக்கலைப்பு செய்யுமாறு கூறி வலியுறுத்தினார்.
ஆனால் குழந்தையை அழிப்பதற்கு டாக்டர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், சந்திரிகா குழந்தை பெற்றுக்கொண்டார். குழந்தை தொடர்பாக இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு, சச்சரவுகள் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் தங்கள் மகன் 14 மாத குழந்தையாக இருந்தபோது இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது சந்திரிகா 15 மாத குழந்தையை 3 முறை தரையில் அடித்து காயப்படுத்தியதாக தனது கணவர் அமன் மிஸ்ரா மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்து உள்ளார்.
அதாவது குழந்தையின் படுக்கையறையில் இருந்து சிசிடிவி பதிவுகளுடன் பங்கூர் நகர் காவல் நிலையத்தை அணுகி இருக்கின்றார். அத்தோடு நடிகை குழந்தையின் படுக்கையறையின் சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தபோது, அமன் குழந்தையை தரையில் மூன்று முறை அடிப்பதை சந்திரா கண்டார்.
இதனையடுத்து அவர் சமையலறையில் இருந்தபோது, தனது 15 மாத மகன் அழுவதைக் கேட்டதாக நடிகை சந்திரிகா அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குழந்தை மலாடு மேற்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளது. அத்தோடு குழந்தையின் நிலைமை சீராக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Listen News!