• Sep 21 2024

தொலைந்த 2 லட்சம் ரூபா பைக்கை வைத்து பல லட்சம் சம்பாதித்த மணிமேகலை-உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்பன சூப்பர் ஹிட்டானவை.

இதில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடந்து வருகிறது.

முதல் சீசனுக்கு கொடுத்த ஆதரவு மூன்றாவது சீசனுக்கும் மக்கள் கொடுத்து வருகிறார்கள்.ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருபவர் தான் மணிமேகலை.

இவ்வாறுஇருக்கையில் மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் இருவரும் சொகுசு கார்கள் மற்றும் பைக்குகளை வாங்கி குவித்து வருகின்றனர். அவர்கள் புதுப்புது கார்களை வாங்கும் வீடியோக்களை, கிராமத்திற்கு செல்லும் வீடியோக்களை தங்கள் youtube சேனலில் vlog போல வெளியிட்டு வருகின்றனர்கள்.

இந்நிலையில் சமீபத்தில் 2 லட்சம் மதிப்புள்ள அவர்களின் பைக் ஒன்றை மர்மநபர் திருடி சென்றுவிட்டார். அது பற்றி போலீசில் புகார் அளித்து இருக்கின்றனர் மணிமேகலை.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை சோகமாகவே வந்திருந்தார். அதை பார்த்த நடுவர் செஃப் வெங்கடேஷ் பட், 'அவரது 2 லட்சம் ருபாய் பைக் தொலைந்துவிட்டது' என எல்லோருக்கும் தெரிவித்தார்.

மேலும் அதை வைத்து மணிமேகலையை அவர் கிண்டல் செய்தார். "தொலைந்தது 2 லட்சம் பைக் தான், ஆனால் அதை வைத்து வீடியோ வெளியிட்டு 5 லட்சம் ருபாய் சம்பாதித்து விட்டார் மணிமேகலை" என வெங்கடேஷ் பட் கூறினார்.

https://www.youtube.com/embed/htqI7txMkB8

Advertisement

Advertisement