• Sep 21 2024

டேஞ்சர் ஷோனில் இருக்கும் 2 பேர்- இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறப்போவது இவரா?- இது என்ன புது டுவிஸ்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் ஆனதை அடுத்து இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.அதன் படி இந்த வாரம் அசீம் விக்ரமன் ரச்சிதா மணிகண்டன் ஏடிகே ஜனனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் ஷிவின், அமுதவாணன், கதிரவன், மைனா நந்தினி உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் ஆகாமல் எஸ்கேப் ஆகி உள்ளனர்.

கேப்டனான வாரத்தை தவிர எல்லா வாரமும் அசீம் பெயரை நாமினேஷனில் இடம்பெற செய்து அவரை வெளியே அனுப்பியே ஆக வேண்டும் என ஹவுஸ்மேட்ஸ் நினைத்தாலும், அசீமுக்கு அதிக ஓட்டுக்களை போட்டு அவரை முதலில் சேஃவ் செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வாரமும் இதுவரை அசீம் தான் டாப்பில் உள்ளார்.


அசீமை தொடர்ந்து இந்த வாரம் நாமினேட் ஆகி உள்ள விக்ரமன் அதிக ஓட்டுக்களை பெற்று 2வது இடத்தில் உள்ளார். வார இறுதியில் கமல் அசீமை முதலில் சேஃவ் செய்வாரா இல்லை, இந்த வாரம் விக்ரமனை முதலில் சேஃவ் செய்வாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் மற்றும் இலங்கையை சேர்ந்த ராப் இசை பாடகர் ஏடிகே இருவரும் இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் உள்ளனர். இதுவரை உள்ள நிலவரப்படி மிகவும் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் ஏடிகே உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 


கடந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் வைத்து ராம் மற்றும் ஆயிஷா வெளியேறிய நிலையில், இந்த வாரம் ஏடிகே தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement