கடந்த 2005-ஆம் ஆண்டு 'மாயூகம்' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபர்ணா பி நாயர். இதனைத் தொடர்ந்து 'மேகதீர்த்தம், முத்துகௌ, அச்சாயன்ஸ், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், ஒரு குட்டி சோத்யம், அமைதி, நொடிகள், தெருவிளக்கு' எனப் பல படங்களிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது 'சந்தனமழை, தேவஸ்பர்ஷம்' உள்ளிட்ட ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். மேலும் இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றையதினம் இரவு நேரத்தில் திருவனந்தபுரம் கரமனாவில் உள்ள அவரது வீட்டில் இவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார். இதனையடுத்து குடும்பத்தினர் உடனடியாக கிள்ளிபாலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு இவரின் உடலைப் பரிசோதித்த வைத்தியர்கள் அபர்ணா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவரின் இறப்பு இயற்கைக்கு மாறானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து இவரின் உயிரிழப்புக்கான காரணத்தை அறியும் நோக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Listen News!