கன்னட படமான காந்தாராவின் வசூல் சாதனைகளை பற்றி தான் திரையுலகிஜல் இருப்பவர்கள் தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னடப் படம் 'காந்தாரா'.
இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. மேலும் இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர்.
திரை பிரபலங்கள் சிம்பு, தனுஷ், கார்த்தி உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர்.அத்தோடு பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக ‘காந்தாரா’ இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். அத்தோடு இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட ரஜினிகாந்த் தற்போது ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் இந்த படத்தின் பட்ஜெட் 10 முதல் 15 கோடி ருபாய் வரை மட்டுமே என சொல்லப்படும் நிலையில் தற்போது உலகளவில் 400 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருக்கிறது.
இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் 10 மடங்கிற்கும் அதிகமாக லாபம் ஈட்டி இருக்கும் காந்தாரா படத்தை மற்ற மொழி படம் எடுக்கும் சினிமா துறையில் ஆச்சர்யமாக பார்ப்பதில் ஒன்றும் வியப்பு இல்லை.
அத்தோடு காந்தாரா படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகுமென ரசிகர்கள் எல்லோரும் மிகவும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் தேதியை அறிவித்து இருக்கிறது.
நாளை (24 நவம்பர்'22) இந்த படம் அமேசானில் 4 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. அத்தோடு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் நிலையில், ஹிந்தி ரிலீஸ் பற்றி அமேசான் நிறுவனம் குறிப்பிடவில்லை.
Listen News!