• Sep 21 2024

47வயதில் குழந்தை பெற்ற பிரபல சீரியல் நடிகையின் தாய்.. மடியில் விழுந்து அழுத மகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கேரள சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆர்யா பார்வதி. இவர் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். 


இந்நிலையில் ஆர்யா பார்வதி தனது 47 வயது அம்மாக்கு தற்போது அழகான குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் "ஒரு தொலைபேசி அழைப்பு என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றியது. அதாவது போன வருஷம், நான் விடுமுறைக்கு ஊருக்குச் செல்வதற்குச் சில நாட்களுக்கு முன், அப்பாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. 

அந்த சமயத்தில் அப்பா பதட்டமாக இருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு '𝗔𝗺𝗺𝗮 𝗶𝘀 𝗽𝗿𝗲𝗴𝗻𝗮𝗻𝘁' என அவர் சொன்னார். அப்போது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் சற்று அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் அம்மாக்கு 47 வயது. இது ரொம்ப வித்தியாசமானது என்று எனக்குத் தெரியும்.


ஆனால் அப்பா என்னிடம் தெரிவிக்கும் போது, அம்மா ஏற்கனவே 8வது மாதத்தில் இருந்தார். உண்மையில், அப்பா இதை கண்டுபிடிக்கும்போது அம்மா 7 மாதங்கள் கர்ப்பமாக இருந்தார் என்பது எனக்கு பின்பு தான் தெரியும்.

என் குழந்தைப் பருவம் முழுவதும், நான் அம்மாவிடம், ‘எனக்கு ஒரு உடன்பிறப்பு வேண்டும்!’ என்று சொல்வேன், ஆனால் நான் பிறந்த பிறகு, அவளது கருப்பையில் ஒரு சில பிரச்சனைகள் இருந்ததால், அவளால் இனி ஒருபோதும் கருத்தரிக்க முடியாது என்று அம்மா என்னிடம் வெளிப்படையாக கூறினார். எனவே, அதே வாழ்க்கை சில காலங்களுக்கு தொடர்ந்தது.

இதனைத் தொடர்ந்து அம்மாவும் அப்பாவும் கேரளாவில் தங்கியிருந்தபோது, நான் பெங்களூருக்கு கல்லூரிக்கு சென்றேன். அப்பா இந்த செய்தியை சொன்ன பிறகு, நான் எப்படி நடந்துகொள்வேன் என்று தெரியாததால் அதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்றார். சில நாட்களுக்குப் பிறகு, நான் வீட்டிற்கு வந்ததும், அம்மாவின் மடியில் விழுந்து அழ ஆரம்பித்தேன். நான் சொன்னேன், ‘நான் எதற்காக வெட்கப்பட வேண்டும்?’ எனக்கு இது ரொம்ப நாளாக ஆசையா இருந்தது என கூறினேன்.


இதனையடுத்து பின்னர் அம்மாவும் நானும் ஒன்றாக நேரத்தை செலவிட ஆரம்பித்தோம். அப்போதுதான், அம்மாவும் அப்பாவும் ஒரு கோவிலுக்குச் சென்றபோது எப்படி தான் கர்ப்பமாக இருந்ததை கண்டுபிடித்தாள் என்று என்னிடம் சொன்னார். அதாவது திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. மருத்துவமனையில், மருத்துவர்கள் அம்மாவை சோதனை செய்தபோது நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயத்தை மெதுவாக, நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் சொல்ல ஆரம்பித்தோம். ஒரு சிலர் கவலை பட்டனர். மேலும் சிலர் பாராட்டினர். சிலர் கேலி செய்தனர். ஆனால் நாங்கள் இதை எதையும் கண்டு கொள்ளவில்லை.  அதனால்தான் அம்மாவின் கர்ப்பம் சீராக சென்றது; எந்தவொரு மன அழுத்தமும் இல்லாமல் இருந்தது என்றார் ஆர்யா பார்வதி. 

மேலும் "கடந்த வாரம் அம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை என்னை ‘அக்கா!’ என்று அழைப்பதற்காக நான் காத்திருக்கிறேன்" எனவும் கூறியுள்ளார் ஆர்யா பார்வதி.

Advertisement

Advertisement