தமிழ் சினிமாவில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்துப் ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. சினிமாவில் இவர் பிரபல நடிகையாக இருந்தாலும் இவரின் நிஜ வாழ்க்கை சோகமான ஒன்றாகவே காணப்படுகின்றது.
அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், "சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்” என்று கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுத் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய சீமானை கைது செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகாரளித்து இருந்தார்.
இதனையடுத்து விஜயலட்சுமி அளித்த பேட்டியில் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தானும், சீமானும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கிறிஸ்தவர் என்பதால் தாலி கட்ட முடியாது என சீமான் கூறியதாகவும் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
அத்தோடு பின்னர் பிரபாகரன் தலைமையில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்கிறேன் என வாக்குறுதி அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறாக தன்னை ஏமாற்றிய அவரை கைது செய்ய வைக்காமல் விடமாட்டேன் எனவும், அது நடக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் விஜயலட்சுமி கண்ணீருடன் பேட்டி அளித்திருக்கின்றார்.
மேலும் அவர் கூறுகையில் தனக்கு தெரியாமல் 7 முறை கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்து தன்னுடைய கருவை சிதைத்தார் எனவும் தெரிவித்திருக்கின்றார். இதன் வாயிலாக தற்கொலைக்கு தூண்டுவதோடு தன்னைப் பற்றி தவறாக பல செய்திகளை பரப்புவதாகவும் கூறியிருக்கின்றார்.
அத்தோடு சீமானால் என் உயிருக்கு ஆபத்து, எனக்கு பாதுகாப்பு தரவேண்டும் எனவும் அப்பேட்டியில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.
Listen News!