"சூப்பர் ஸ்டாரு யாரென்னு கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்.." என்ற பாடலிற்கு இணங்க நடிகர் ரஜினிகாந்திற்கு சிறியோர் முதல் பெரியோர் வரை ஏராளமான ரசிகர்கள் உண்டு.
இவரின் படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் எப்போதுமே காத்திருப்பது வழமை. அந்தவகையில் இவர் நடிப்பில் தற்போது 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் இவருடன் இணைந்து மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகையான ஒரு சிறுமி செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது சேலத்தை சேர்ந்த 15 வயதுள்ள ஒரு சிறுமி தனது பெற்றோருக்கு தெரியாமல் பள்ளி ஆசிரியரை பார்ப்பதாக கூறிவிட்டு சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ரஜினிகாந்த் வீட்டில் 15 சிறுமி ரஜினி விட்டில் இருப்பதை பார்த்த வீட்டுக்காவலாளி உடனே போலிசாருக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குறித்த சிறுமியை மீட்டுள்ளனர்.
Listen News!