ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் யானை. அதிரடி ஆக்ஷன் மற்றும் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக கடந்த வாரம் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் அவருக்கு அம்மாவாக நடிகை ராதிகா நடித்துள்ளார்.
இரண்டு குடும்பம், அவர்களுக்கான பிரச்சினை யார்? யாரை? பழி வாங்கப் போகிறார்கள்? என்பதுதான் ஹரியின் டெம்பிளேட் கதைதான் யானை இந்தக்கதையில் காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் மசாலா தூவி கொடுத்துள்ளார். ராமேஸ்வரத்தில் வில்லன், ராமநாதபுரத்தில் நாயகன் குடும்பம், இவர்களுக்குள் என்ன பிரச்சினை அதனால் நாயகன் குடும்பம் என்ன ஆனது என்பதே தனக்குரிய பார்முலாவில் திரைக்கதை அமைத்து கூறியுள்ளார் ஹரி.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஹரியின் முந்தைய படங்களைப் போல ஒரு விறுவிறுப்பு இதில் இல்லை என்றும் ரசிகர்கள் பலரும் பரவலாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதனால் யானை படத்தில் நேற்று முதல் ஐந்து நிமிட காட்சிகள் வெட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து படக்குழுவினர் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- திருமணம் முடிந்த கையோடு ஸ்ராட் மியூசிக் அஜய் கிருஷ்ணா எடுத்த திடீர் முடிவு
- மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகை ரச்சிதாவின் கணவர்-அதுவும் எந்த டிவியில் தெரியுமா?
- பத்திரிகையாளர் சந்திப்பில் கதறி அழுத பிரபல நடிகை- ஆறுதல் படுத்திய சாய்பல்லவி
- கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் சீரியலின் நேரம் மாற்றப்பட்டதற்கு இந்த சீரியல் தான் காரணமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!