தென்னிந்திய ரசிகர்களைக் கவரும் விதமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் எனப் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.
கன்னடத்தில் பிக் பாஸ் 10ம் சீசன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பமாகியது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஆரம்பித்து 20 நாட்களைக் கடந்துள்ளது.மேலும் கன்னடத்தில் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வரதூர் சந்தோஷ் என்பவரை தற்போது போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் சந்தோஷ் தனது கழுத்தில் புலியின் நகம் இருக்கும் செயின் அணிந்து இருந்தார்.இது சர்ச்சை ஆன நிலையில் அவர் மீது கர்நாடக வனத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் இன்று அவர் பிக் பாஸ் செட்டில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கின்றனர். புலி பல், நகம் போன்றவற்றை விற்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்பதால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு என்ன தண்டனை என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!