தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக பல ஆண்டுகளாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தனது தந்தையின் இயக்கத்தில் அமைந்த 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைத்தவர். அதனைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் சுமார் 65 இற்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன.
இவர் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஏராளமான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்திருக்கின்றன. எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்து கொள்ளும் திறமை இவருக்கு உண்டு. இவரின் நடிப்பிலும், நடனத்திலும் மயங்கி இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு.
இவ்வாறாக தன்னுடைய திறமையினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட விஜய் தற்போது 'வாரிசு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து ரஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். அதுமட்டுமன்றி மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இவர்களுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமைந்த 'தளபதி 67' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் 6 வில்லன்கள் என ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது. இதில் சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் முதல் இரண்டு வில்லன்களாக தேர்வாகியுள்ளார்களாம். அதே போல் மூன்றாவது வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இப்படம் தொடர்பாக மற்றுமோர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது நான்காவது வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து ஏற்கனவே வெளிவந்த 'மாஸ்டர்' படத்திலும் வில்லனாக இவரே நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுன்றி சமீபத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படத்திலும் வில்லனாக மிரட்டலான நடிப்பை விஜய் சேதுபதி வெளியிப்படுத்திருந்தார் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அத்தோடு இப்படம் ஆனது மாபெரும் வெற்றியை ஈட்டியிருந்தது.
இதனால் விஜய்யின் 'தளபதி 67' படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதிருந்தே எதிர்பார்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
Listen News!