• Sep 21 2024

பணமோசடி வழக்கில் சிக்கிக் கொண்ட பிரபல நடிகை ,அதிரடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

சுகேஷ் சந்திரசேகர் மீது அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரிடப்பட்டதையடுத்து, ஜாக்குலின் பெர்னாண்டஸ் அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் முக்கிய இடத்தை பிடித்திருந்தார் இவர் குறித்த பதிவுகளே அதிகம் வெளிவந்தன 


200 கோடி மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பணமோசடி வழக்கில் இவர் சிக்கிக்கொண்டதுடன், நடிகை கான்மேனுடன் டேட்டிங் செய்வது பற்றிய பல செய்திகள்  சமூக ஊடகங்களில் வெளிவந்தன, ஆனால் அவர் எப்போதும் இந்த விடயத்தில் அமைதியைக் கடைப்பிடித்து வந்தார். சமீபத்தில், டெல்லி காவல்துறையினரால் இந்த வழக்கு விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரப்பட்டிருந்தது இருப்பினும் நடிகை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இவர் தனது 'முன் வாக்குறுதிகள்' காரணமாக ஆஜராகவில்லை.


அதுமட்டுமில்லாது தான் இந்த நீதிமன்ற நடவடிக்கையில் ஆஜராக முடியாது என்று மின்னஞ்சல் அனுப்பியதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களில் கருத்து வெளியிட்டார் அதுமட்டுமல்லாது  அந்த அதிகாரி, "இப்போது, ​​இந்த வழக்கின்  விசாரணையில் சேர ஜாக்குலினுக்கு புதிய சமன் அனுப்புவோம். புதிய சம்மன் தேதிகள் விரைவில் முடிவு செய்யப்படும்" என்று கூறினார். இதற்கிடையில், சுகேஷ் சந்திரசேகர் தற்போது 10 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளுடன் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Advertisement

Advertisement