• Sep 19 2024

அந்த மாதிரி நடிப்பதற்கு ஓகே சொன்ன பிரபல விவாகரத்து நடிகை... அதுவும் திருமணமாகாத நடிகருடன் இணைந்தா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாத் திரையுலகில் முன்னணி வகிக்கும் பெண் நட்சத்திரங்களில் ஒருவராகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா.

இவருடைய சிரிப்பிலும் சரி, அழகிலும் சரி மயங்காதவர் யாருமில்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு இவர் தன்னுடைய கொள்ளையழகில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டிருக்கின்றார்.


தமிழ் சினிமாவில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரம் ஒன்றின் வாயிலாக அறிமுகமான சமந்தா தன் விடாமுயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்கின்றார். அதுமட்டுமன்றி இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான 'பிலிம்பேர்' விருதினையும் வென்றிருக்கின்றார்.


அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களிலும் நடித்து வந்த சமந்தா தற்போது தமிழில் மட்டுமன்றி தெலுங்குத் திரையுலகிலும் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றார்.  

இவ்வாறாக படங்களில் பிஸியாக இருந்து வருகின்ற சமந்தா தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகரான நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 இல்  திருமணமும் செய்து கொண்டார்.


எனினும் 2021 இல் இவர்கள்  இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்து விட்டார்கள். திருமணத்துக்கு பிறகும் அரைகுறை உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார் சமந்தா.


இந்நிலையில் தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது பாலிவுட் திரையுலகிலும் கால்தடம் பதித்துவிட்டார். அதாவது மூன்று நடிகர்களுடன் இணைந்து நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாலிவுட் நடிகரான ஆயுஷ்மான் குரானா நடிக்கும் படத்தின் மூலம் தான் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் சமந்தா. ஆயுஷ்மான் குரானா திருமணம் ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இப்படத்தை அமர் கவுசிக் என்பவர் பிரமாண்டமாக இயக்கி வருகின்றார். 


அந்த வகையில் இப்படம் தொடர்பான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தில் இளவரசியாகவும், பேயாகவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் நடிகை சமந்தா.

மேலும் இதுவரை எந்த ஒரு படத்திலும் பேயாக நடிக்காமல் இருந்து சமந்தா தற்போது முதல் முறையாக பாலிவுட்டில் பேயாக நடிக்கிறார். இதனால் இப்படத்தில் பேயாக சமந்தாவை பார்க்க ரசிகர்கள் தற்போதில் இருந்தே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். 

Advertisement

Advertisement