• Sep 20 2024

சென்னையில் வீட்டுக்குள் புகுந்த பெரிய பாம்பு-கையால் பிடித்து மக்களை வியப்பில் ஆழ்த்திய பிரபல தமிழ் நடிகர்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் சுகுமாரும் ஒருவர். மேலும் இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான “காதல்” படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து உள்ளார்.

மேலும்,இந்த படத்தில் பரத், சந்தியா நடித்து உள்ளார்கள். அத்தோடு இந்த படத்தின் மூலம் நடிகர் சுகுமார் மக்களிடையே பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் காதல் படத்திற்கு முன்பாகவே இவர் கமலுடன் விருமாண்டி என்ற படத்தில் நடித்து உள்ளார்.

இவர் முதன்முதலாக 1997ம் ஆண்டு ‘சக்தி’ என்ற படத்தில் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அத்தோடு ,நடிகர் சுகுமார் அவர்கள் சினிமா உலகில் நடிகர் மட்டும் இல்லாமல் சில படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார்.

மேலும் நடிகர் காதல் சுகுமார் அவர்கள் முதலில் சின்னத் திரையில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் நடித்தும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தவர். அதற்கு பின்னர் தான் இவர் காதல் திரைப் படத்தின் மூலம் நகைச் சுவை நடிகராக சினிமா உலகிற்குள் என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் சென்னை ஶ்ரீதேவி குப்பத்தில் உள்ள நடிகர் 'காதல்' சுகுமார் வீட்டில் பாம்பு புகுந்தது. மேலும் மனைவியும், மகளும் பதறியடித்து ஓட, காதல் சுகுமார் மட்டும் தைரியமாக உள்ளே சென்று பாம்புக்கும் தனக்கும் சேதாரம் இல்லாமல், அதை லாவகமாக பிடித்து, சற்று தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று உயிருடன் விடுவித்தார். இதற்காக அக்கம்பக்கம் குடியிருப்பு வாசிகள் சுகுமாரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement