தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அதன்பின் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் நடிப்பில் தற்போது 'சிங்கப்பூர் சலூன்' என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை கோகுல் என்பவர் இயக்குவதோடு, ஐசரி கே. கணேஷ் பிரமாண்டமாக தயாரிக்கின்றார்.
இந்நிலையில் இப்படத்தின் உடைய படப்பிடிப்பின் போது ஹீரோ ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இயக்குநர் கோகுல் ஆகியோருக்கு இடையே பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையின் காரணமாக படப்பிடிப்பு நின்றுவிட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாது அந்த இடத்தில் இவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய தயாரிப்பாளர் பல முயற்சிகள் செய்தும் அவை யாவும் கொஞ்சமும் கைகூடவில்லை என்பதினால், படத்தையே நான் நிறுத்திவிடுகிறேன் என்று முடிவு செய்துவிட்டாராம் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ்.
பின்னர் ஒருவாறாக இதன்பின் அவர்கள் இருவரும் தங்களது சண்டையை நிறுத்தி மனமிரங்கி வந்தார்கள் எனவும் கூறப்படுகின்றது.
Listen News!