• Sep 20 2024

போனிகபூர் பட ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டில் ஏற்பட்ட தீ- ஒருவர் பலி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மும்பை அந்தேரி பகுதியில் அமைந்துள்ள சித்ரகூட் என்கிற மைதானத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

மேலும் அந்த பணிகள் முடிந்து இறுதியில் அங்கு பொருத்தப்பட்டுள்ள ஒளிவிளக்குகள் சரிவர ஒளிர்கிறதா என்பதை சோதிக்கும் பணி நேற்று இடம் பெற்றது.

அப்போது மின்கசிவு ஏற்பட்டதில் நேற்று மாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீ மளமளவென பரவியதில் அந்த செட் முழுவதும் எரிந்துள்ளது

அந்த செட்டில் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த நடிகர், நடிகைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் போனி கபூர் நடிகராக அறிமுகமாக உள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.மேலும் இதில் செட் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் படக்குழுவுக்கு ரூ.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

ரன்பீர் கபூரும், ஷ்ரத்தா கபூரும் நேற்று வேறு சில வேலைகளில் பிசியாக இருந்ததனால் ரிகர்சலில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குனர் லவ் ரஞ்சன் என்பவர் இயக்க உள்ளார். மேலும் இந்த செட்டில் பிரம்மாண்ட பாடல் காட்சி படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement