• Sep 20 2024

மொழி சர்ச்சையில் அஜய் தேவ்கன் பின்னால் மர்ம நபர்?: பகீர் கிளப்பும் பிரபல நடிகர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தி மொழி தொடர்பாக கிச்சா சுதீப் போட்டிருந்த ட்வீட்டர் பதிவில், அஜய் தேவ்கன் கருத்து தெரிவித்திருந்தார்.

அப்போது இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றி கடும் மோதலில் சிக்கி இருந்தது. கிச்சா சுதீப், அஜய் தேவ்கன் ஆகியோரின் ரசிகர்களும் ட்வீட்டரில் அதிரடியாக மோதிக் கொண்டிருந்தனர். இந்தச் சம்பவம் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கிச்சா சுதீப்பின் ட்வீட்டர் பதிவுகளுக்கு உடனுக்குடன் எதிர் கருத்துகளைக் கூறி பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டே சென்றார் அஜய் தேவ்கன்.மேலும் கிச்சா சுதீப்பும் அஜய் தேவகனுக்கு அடுத்தடுத்து பதிலடி கொடுத்து கலங்கடித்தார். இதனால், இது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ள கிச்சா சுதீப், அஜய் தேவ்கனுக்கு பின்னால் மர்ம நபர் இருந்திருக்கலாமென சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

அத்தோடு இந்தப் பிரச்சினைகள் ஒருபக்கம் இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் அஜய் தேவ்கன் தனக்கு நெருங்கிய நண்பர் என்று கிச்சா சுதீப் கூறப்பட்டது இருவரது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் அஜய் தேவ்கன் பக்கா ஜெண்டில்மேன் எனவும் அவருக்கு கிச்சா சுதீப் சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.அத்தோடு தனது கருத்துக்கு அஜய் தேவ்கன் இந்தியில் பதிலளித்தது மட்டுமே என்னை யோசிக்க வைத்துள்ளதாக தெரிவி.

இந்தி மொழி குறித்த கிச்சா சுதீப்பின் டிவீட்டர் பதிவுக்கு அஜய் தேவ்கன் மோத காரணம், அவர் நடிப்பில் அப்போது வெளியாக இருந்த ரன்வே 34 படத்தின் விளம்பர உத்தியாக இருக்கும் என பலரும் விமர்சித்தனர். மேலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'ரன்வே 34' திரைப்படம் பெரும் தோல்வியைத் தழுவியதோடு, விரைவில் ஓடிடியிலும் வெளியானது தனிக் கதை.

மேலும் இந்த நிலையில், கிச்சா சுதீப் நடித்துள்ள,விக்ராந்த் ரோணா திரைப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமான இது 3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'விக்ராந்த் ரோணா' படம் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் அஜய் தேவ்கன் உடனான ட்வீட்டர் மோதல் குறித்து கிச்சா சுதீப் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement