ராஜமெளலி இயக்கத்தில் மரகதமணி கீரவாணி இசையில் உருவான ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை வென்றது. இதற்கு திரைப் பிரபலங்கள், அரசியல் வாதிகள் எனப் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆந்திராவின் முதலமைச்சரான ஒய்.எஸ் . ஜெகன் மோகன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ராஜமெளலி, இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரையும் அவர்களது திறமையான ஆட்டத்துக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பதிவில் "இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா தான் என்கிற மாயையும் பாலிவுட் மட்டுமே இந்திய சினிமா என்றும் இத்தனை ஆண்டுகளாக இருந்த நிலையை போக்கி தெலுங்கு கொடி தற்போது உலகளவில் ஒய்யாரமாக பறக்கிறது. அதற்கான சிறப்பான வேலையை செய்த இயக்குநர் ராஜமெளலியை பாராட்டுகிறேன்" என ஜெகன் மோகன் ரெட்டி குறிப்பிட்ட நிலையில், இந்தி ஆதரவாளர்களுக்கு அவரது ட்வீட் கோபத்தை உண்டாக்கி இருக்கின்றது.
அந்தவகையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தையும் நாட்டு நாட்டு பாடலையும் இந்தியர்களே கொண்டாடி வரும் நிலையில், தெலுங்கு கொடி உயர பறக்கிறது என பதிவிட்டு இருப்பது அரசியல் நிலைபாட்டையே குறிப்பதாகவும் ஆந்திர முதலமைச்சர் பாகுபாடு பார்ப்பதாகவும் இது முற்றிலும் தவறான விஷயம் எனவும் கூறி பிரபல பின்னணி பாடகர் அத்னன் சாமி சர்ச்சையை கிளப்பி ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியிடமே சண்டைக்கு சென்றுள்ளார்.
அதாவது "குளத்தில் இருக்கும் தவளை புத்தி தான் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு" என படு மோசமாக அவரை விமர்சித்து பாடகர் அத்னன் சாமி சர்ச்சையை கிளப்பி இருக்கின்றார். இதற்கு ஆந்திர முதலமைச்சரின் செய்தித் தொடர்பாளர் முதலில் நீங்கள் ஒரு முதலமைச்சர் பற்றி பேசும் போது நாகரீகமாக பேச வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என அவரை எச்சரித்து வருகின்றார்.
Listen News!