• Sep 21 2024

முதன்முதலாக பிரசாந்த் மீது சந்தேகப்படும் மீனா-ஜனார்த்தனின் கதையை முடிக்க போட்ட புதுப் பிளான்- Pandian Stores Promo

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் பிரசாந்த் தான் தன்னுடைய அப்பாவைக் கத்தியால் குத்தியது என்ற உண்மை தெரியாததால் கதிர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றார் மீனா. 

இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மீனா தன்னுடைய அப்பாவுக்கு மாத்திரை வாங்குவதற்காக தன்னுடைய அப்பாவைத் தனியாக விட்டிட்டு போகின்றார்.


அந்த நேரம் பிரசாந்த் உள்ளே சென்று ஜனார்த்தனனின் ஆக்சிஜன் வயரை கழட்டப் பார்க்க மீனா வந்து விடுகின்றார். இதனால் பிரசாந்த் சமாளித்து விட்டுப் போகின்றார்.

பின்னர் மீனா, தன்னுடைய தங்கச்சியிடம் சென்று பிரசாந்தை எப்போது டிச்சார்ச் பண்ணுறாங்க என்று கேட்க அவரை டிச்சார்ச் பண்ணியாச்சு ஆனால் அவர் தான் வரமாட்டேன் என்று சொல்லுறாரு என்கின்றார். இதைக் கேட்ட மீனா பிரசாந்த் மீது சந்தேகப்பட்டு ஹாஸ்பிட்டலுக்கு போகின்றார்.

அப்போது பிரசாந்த்ஜனார்த்தனனை அடிக்கடி எட்டிப் பார்ப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது. 



Advertisement

Advertisement