• Sep 21 2024

பிருத்விராஜுடன் நயன்தாரா இணைந்து நடித்த கோல்ட் திரைப்படத்திற்கு ஏற்பட்ட புதிய சோதனை- திட்டத்தை மாற்றிய படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!


நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் கோல்ட். இப்படத்தில் பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

மேலும் இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகின்றது.அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 


மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட புரமோஷன் வேலைகளும் நடைபெற்று வந்தன.இந்த நிலையில் கோல்ட் திரைப்படத்தின் வேலைகள் முடிவடையவில்லை.இதன் காரணமாக ஒரு வாரம் படத்தின் வெளியீடு தள்ளிச் செல்கிறது என இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அறிவித்திருக்கிறார்.

இதனால் ஓணம் பண்டிகை வெளியிட்டிருந்து கோல்ட் திரைப்படம் தள்ளிச் சென்றுள்ளது. இருந்தாலும் அதற்கு அடுத்த வாரம் படம் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.இதனால் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement