தமிழ் திரையுலகில் நடிப்பிற்கு பேர் போனவர் என்றால் அது நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான். 1952-ஆம் ஆண்டு 'பராசக்தி' என்ற படத்தின் மூலம் தொடங்கிய இவரது திரையுலக பயணம் 1999-ஆம் ஆண்டு 'பூப்பறிக்க வருகிறோம்' என்ற படத்தில் முடிந்தது.
இவர் நடிப்பில் வெளியான படங்களோ ஏராளம். அதிலும் குறிப்பாக 'தில்லானா மோகனாம்பாள்' முதல் 'பாசமலர்' வரை இவரின் பல திரைப்படங்கள் ப்ளாக் பஸ்டர் செம ஹிட்டாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருடன் இணைந்து நடிப்பது என்றாலே அதை பெரிய கௌரவமாக பலரும் கருதுவார்கள்.
அந்த வகையில் சிவாஜியுடன் இணைந்து ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளார்கள்.
ஆரம்பத்தில் ஒரு நாடக நடிகராக மேடையேறிய இவர் பேசும் வசனம், தெளிவான உச்சரிப்பு போன்ற பல திறமைகளும் இவரை பல போராட்டத்திற்கு பிறகு நடிகராக்கியது.
அதிலும் இவர் நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்த பல நாட்கள் பட்டினி கிடந்தும், தூங்காமலும் கூட நடித்துள்ளார். இதற்கான காரணம் அந்த அளவிற்கு நடிப்பின் மீது அவ்வளவு ஆர்வம் அவருக்கு இருந்தமையை ஆகும்.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் இவரது பிறப்பு மற்றும் மறைவு தினங்களில் இந்த நடிப்பின் நாயகனை ரசிகர்கள் பலரும் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போலவே ஒருவர் வேடம் போட்டு அவரைப் போலவே நடந்து மணமக்களை வாழ்த்தியிருக்கின்றார்.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் கண்ணன் என்பவர், அச்சுஅசலாக சிவாஜிகணேசனைப்போல் வாழ்த்திய காட்சி அசத்தல் மக்கா pic.twitter.com/uguG2t0bV5
இந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.
Listen News!