• Sep 20 2024

வீட்டுக்கு வந்த எழிலுக்கும் அமிர்தாவுக்கும் காத்திருந்த இன்ப அதிர்ச்சி- அனைவரையும் சிரிக்க வைத்த பழனி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

இங்கிலிஸ் கிளாசில் எல்லோரையும் நிலாவின் பிறந்தநாளுக்கு அழைக்கின்றார் பாக்யா.இதற்கு எல்லோரும சம்மதம் தெரிவித்து தாங்களும் வருவதாக கூறுகின்றனர்.பின்னர் வீட்டுக்கு வந்ததும் செல்வி நிலா பாப்பாவின் பிறந்தநாள் என்று சொன்னீங்க ஆனால் எதுவுமே இன்னும் பண்ணலையே என்று பாக்கியாவைக் கேட்கின்றார்.


பின்னர் ஜெனி நிலா பாக்கியா மூவரும் இணைந்து வீட்டை அலங்கரிக்க அங்கு வரம் ஈஸ்வரி என்ன விஷேசம் என்று கேட்க நிலா பாப்பாவின் பிறந்த நாள் என்கிறார் பாக்கியா. அப்போ எனக்கு சொல்லலையே என்று கூறும் போது பாக்கியா நீங்க ரெஸ்ட் டிடுக்க வேண்டும் என்று தான் சொல்லல என்று கூறி சமாளிக்கின்றார்.

பின்னர் நிலாவின் பிறந்தநாளுக்காக இனியாவும் தாத்தாவும் முதலில் வருகின்றனர். பின்னர் அமிர்தாவின் மாமனார் மாமியார் வந்தனர். கோயிலுக்குச் சென்று திரும்பி வந்த எழிலும் அமிர்தாவும் அலங்காரங்களைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.பின்னர் ஜெனியும் இனியாவும் நிலாவுக்கு புது ட்ரெஸ் போட்டு அழைத்து வர எல்லோரும் மாறி மாறி கொஞ்சுகின்றனர்.


செழியனும் நிலாவிற்கு வாழ்த்துத் தெரிவிக்க அனைவரும் கேக் வெட்டி மகிழ்கின்றனர். தொடர்ந்து பழனி தனது நண்பர்களுடன் வருகின்றார். அவர் தன்னுடைய வாழ்க்கையை பற்றி கூறுகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement