பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே 2019 ஆம் ஆண்டு தர்மா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு, பதி பட்னி அவுர் வோ என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் அனன்யா தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருது இவருக்கு கிடைத்தது.
சமீபத்தில், தென்னிந்திய நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் லிகர் படத்தில் டைட்டில் ரோலில் நடித்தார். இன்னும் இரண்டு படங்களில் இவர் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது இத்தாலியில் தனது விடுமுறையைக் கழிக்கும் நடிகை அனன்யா பாண்டே அங்கு கடற்கரை மற்றும் கொலோசியம் விளையாட்டு அரங்கின் முன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது ரசிகர்களுக்காகப் பகிர்ந்து கொண்டார்.
இப்பதிவைப் பகிர்ந்த உடனே அவரது ரசிகர்கள் விரைவாக தமது கருத்துகளை பதிவு செய்தனர். தற்போது இவர் ரோமில் இருந்து தனது விடுமுறையை முடித்துக்கொண்டு திரும்ப உள்ளார். இந்நிலையில் இது குறித்து தற்போது புதிய பதிவை இவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவு இதோ
Listen News!