• Sep 20 2024

பணத்திற்காக வேலை செய்யாத ஏ.ஆர்.ரஹ்மான்…இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனுஷனா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவரே ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தன்னுடைய திறமையினால் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் எனப் பல மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்து இன்று இசைப்புயலாக உயர்ந்து நிற்கின்றார். அதுமட்டுமல்லாது கோல்டன் குளோப் விருது, ஆஸ்கார் விருது எனப் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.

எனினும் இவர் திரையுலகில் அறிமுகமாவதற்கு அடித்தளம் இட்டுக் கொடுத்தவரே மணிரத்னம் தான். அதன் பின்னர் தன்னுடைய இசையினால் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கின்றார். இவர் இசையமைக்கும் படங்களிற்கு பணத்தினை குறிக்கோளாக கொண்டு இசையமைப்பதில்லை.

இந்நிலையில் இவர் தற்போது 'பொன்னியின் செல்வன்', 'இரவின் நிழல்', ஆகிய படங்களில் பிஸியாக இருந்து வருகின்றார். இந்தப் படங்களிற்கு கூட இவர் பணத்திற்காக வேலை செய்யாது இவர்களுடன் பழகிய பழக்கத்திற்காகவும், தனக்கு எந்த ஒரு இடைஞ்சலும் கொடுக்காமல் இஷ்டப்படி வேலை செய்யும் உரிமைக்காகவும் மட்டுமே கமிட்டாகி வேலை செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்தக் காலத்திலேயும் இப்பிடியானவங்க இருக்காங்க என்றால் யோசிச்சுப் பாருங்களன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement