லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. நடிகர் விஜய் நாயகனாக நடித்து வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் ஷூட்டிங் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கியது. இதையடுத்து 10 நாள் சென்னையில் ஷூட்டிங்கை நடத்திய படக்குழு, பின்னர் காஷ்மீருக்கு சென்று அங்கு 2 மாதங்கள் தங்கி படப்பிடிப்பை நடத்தியது.
இதையடுத்து காஷ்மீர் ஷெட்யூலை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு கடந்த மாதம் சென்னை திரும்பிய படக்குழு தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகிறது. சென்னையில் உள்ள பிலிம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் லோகேஷ்.
லியோ படத்தை அடுத்து விஜய் யாருடைய படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. இப்படியான நிலையில் விஜய்யின் வீட்டின் முன்னால் இருக்கும் சிசிடிவி முன்னால் மாணவி ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். அதாவது நான் உங்ளை பார்க்கிறதுக்காக உங்க வீட்டுக்கு முன்னாடி நிற்கிறேன். உங்க பார்க்கணும் என்று ஆசையாக இருக்கு நீங்க என்னை வந்து பார்ப்பீங்க என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.இதனால் விஜய் என்ன முடிவு எடுக்கப் போகின்றார் எனற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!