• Sep 20 2024

திருமணத்தை பற்றி புலம்பிய ராதிகாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி...மாஸாக வந்து இறங்கிய பாக்கியா...வெளியான சூப்பர் ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. பெங்காலி மொழி தொடரான ஸ்ரீமோயி என்கிற தொடரை மறு உருவாக்கம் செய்து பாக்கியலட்சுமி என்கிற பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது. 

மேலும் இந்த சீரியலில் சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் மற்றும் இன்னும் பலர் நடித்து வருகின்றனர். ஓர் இல்லத்தரசியின் கதை என்கிற வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டது. இதில் பாக்கியலட்சுமிக்கு அவரது கணவர் விவாகரத்து கொடுத்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அத்தோடு கோபியியுடன் மகள் இனியாவும், அப்பா ராம மூர்த்தியும் வந்து வசித்து வருகின்றனர். 

இந்த கதையில் பாக்கியா அம்மாவாக, மனைவியாக, மருமகளாக, மாமியாராக  பல பொறுப்புகளை சுமக்கின்றார். ஆனால் அவர் படும் பாடுகள் என்ன. சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள். 

பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். அத்தோடு ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை. தற்போது கணவரின் இரண்டாவது மனைவி ராதிகா செய்த சதியால் அவருக்கு கிடைக்க இருந்த கேண்டீன் காண்ட்ராக் அவரை விட்டுப் போய்விட்டது. இதனால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தான் நடத்தி வரும் மசாலா கம்பெனி வாசலிலேயே அவர் உணவுகளை விற்கும் தொழிலை தொடங்குகிறார். ஆனால் அங்கும் அவருக்கு பல சிக்கல்கள் எழுகின்றது.. இப்படியாக தொடர்ந்து பல சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்தி வருகிறார் பாக்யா. 

இந்நிலையில் இன்று ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் ராதிகா ஒரு பார்லரில் இருந்து கொண்டு தனது திருமண வாழ்க்கை கஸ்ரத்தை கூறிக்கொண்டு இருக்கிறார்.அதாவது எதுக்கு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்று ராதிகா புலம்பிக்கொண்டு இருக்க பக்கத்தில் இருந்து கொண்டு பாக்கியலட்சுமி இதைக் கேட்கின்றார்.

பின் இதை எல்லாம் கேட்ட செல்வி...இந்த அம்மா தான் இப்படி புலம்பிட்டு இருந்தாங்களா... என கூறிக்கொண்டு இருக்கையில் ராதிகா பாக்கியாவை பார்த்து ஷாக்காகி மனதிற்குள் பாக்கியா பற்றி பேசுகின்றார்.அதன் பின் மொடேர்ன் ஆக மாறிய பாக்கியா ஸ்டைலாக காரை விட்டு இறங்குகின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ....



Advertisement

Advertisement