தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சரத்குமார் மகளாக போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
மேலும் இப்படத்தினை தொடர்ந்து அவர் நடித்த படங்களில் ஓரளவிற்கு வரவேற்பு பெற்று வந்த நிலையில், தமிழ், தெலுங்கு மொழிகளில் வில்லி ரோலில் நடித்து வந்தார்.
எனினும் தற்போது உடல் எடையை குறைத்து நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பல விசயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்படி ஒருமுறை, டிவி சேனல் நிறுவனம் என்னுடைய வீட்டிற்கு வந்து ஒரு நிகழ்ச்சி குறித்து பேச வந்தார்கள்.
நிகழ்ச்சி பற்றி பேசி முடித்துவிட்டு கிளம்பும் போது மற்ற விசயங்கள் பற்றி ஓட்டலில் எப்போது பேசலாம் என்று கேட்டார்.
எனினும் இதுகுறித்து என் நண்பர்கள் நீ அமைதியா இருந்தியா அடிக்கவில்லையா என்று கேட்டனர்.
என்னிடமே இப்படி கேட்ட அவர் மற்ற பெண்களிடம் எப்படி கேட்டிருப்பார் என்று நினைத்தேன். அதன்பின்னர், நீங்கள் கிளம்புங்கள் என்று கூறினேன் என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
Listen News!