• Sep 20 2024

ஜாஸ்மின் ரூமில் புகுந்த பாம்பு?-சங்கரபாண்டி சொன்ன விஷயம்- மாரி சீரியல் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தாரா அரவிந்திடம் இப்போது நாம் மாரியை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும். அனுப்பினால் தான் சூர்யாவை நம் இஷ்டத்துக்கு மாற்ற முடியும். 

சொத்துக்களை உன் பேருக்கு மாற்ற முடியும், அதனால் சூர்யா ஜாஸ்மின் கல்யாணம் நடந்தே தீர வேண்டும் என்று தாரா சொல்கிறாள்.அடுத்து சங்கர பாண்டி தாராவிடம் மாரிக்கு தெய்வ சக்தி இருப்பதாகவும் உடன் பாம்பு இருப்பதாகவும் சொல்கிறான்‌. ரிஜிஸ்டர் ஆபீசில் பாம்பு வந்து கல்யாணத்தை நிப்பாட்டியதையும் கோயிலில் பாம்பு வந்ததுக்கு அப்புறம் கல்யாணம் பண்ண போன விஷயத்தை சொல்ல ஜாஸ்மின் இது ஒரு மூட நம்பிக்கை இதெல்லாம் சொல்லாதீங்க என்று சத்தம் போடுகிறாள்.


அடுத்து ரூமில் சூர்யா யோசித்தபடி இருக்க மாரி என்னவென்று கேட்க இல்ல பாம்பு கூட நீ பேசுவியா என்று கேட்க என்னத்துக்கு என்று கேட்க இல்லை பாம்பு எப்பவும் கூடவே வந்து எந்த ஒரு விஷயம் பண்ணாலும் காக்குது, சங்கர பாண்டி மாமா சொல்லிட்டே இருக்காரு அதனால நீ பாம்பு கூட எல்லாம் பேசுவியா என்று கேட்க மாரி அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்ல நான் நாகாத்தம்மன் கோவிலுக்கு போய் பாம்புக்கு பால் வச்சு முட்டை ஊத்துவேன் அதுதான் என்று சொல்லிவிட்டு போகிறாள்.

அடுத்து ஜாஸ்மின் சங்கரபாண்டி சொன்னதை நினைத்தபடி இருக்க டிவி போட டிவியில் பாம்பு படம் ஓடுவது அதை பார்த்து அப்செட் ஆன ஜாஸ்மின் கீழே வர ஒரு பாம்பாட்டி வந்து உங்கள் வீட்டில் பாம்பு இருக்கு என்று சொல்ல ஜாஸ்மின் அவனைத் திட்டி பாம்பு ஊதும் குழாயை உடைத்து போடுகிறாள். அவன் திடீரென்று டேபிளில் பாம்பு இருக்க டிவியில் பாம்பு இருக்க தன்னை சுற்றி பாம்பு இருப்பதாக உணர்கிறாள். ஆன்ட்டி, அங்கிள் என அழ அனைவரும் வந்து என்னவென்று கேட்க தன் ரூமில் பாம்பு இருப்பதாக சொல்ல அனைவரும் ஷாக்காகிறார்கள்.

Advertisement

Advertisement