தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக இருந்தாலும் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்க போவதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பானது மூனாரில் விரைவில் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் சஞ்சய் தத் விஷால் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் தமிழ்நாட்டில் விஜய் படத்தின் ஷூட்டிங்கை நடத்தினால், ரசிகர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தமுடியாது என்று இப்போது மும்பை அருகே மூனாறு போன்ற ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கே ஷூட் செய்ய இயக்குநர் லோகேஷ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!