விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.
எல்லோரும் துாங்கிட்டு இருக்கும் போது திடீரென மழை வந்து விட்டதால் நமச்சியும் கார்த்திக்கும் எழுந்து உள்ளே வருகின்றனர். அப்போது எல்லோரும் எழுந்து விடுகின்றனர். பின்னர் கோதை டீ வைத்துக் கொடுக்க ஜாலியாக இருந்து பேசுவதோடு பாட்டுக்கு பாட்டு போட்டி வைக்கின்றனர்.
எல்லோரும் சேர்ந்து பாட்டுப் பாடி அசத்த கோதையும் பாடுகின்றார்.இதனால் எல்லோரும் சிரித்துப் பேசி மகிழ்கின்றனர். தொடர்ந்து விடிந்ததும் தமிழ் பிரியாணி கடையில் வாங்கிக் கொண்டு வந்து எல்லோருக்கும் சாப்பிடக் கொடுக்கின்றார்.முதலில் பிரியாணி எதற்கு வாங்கினீங்க என்று கேட்க தமிழ் இன்டைக்கு ஒருநாள் தானே என்று சொல்லி சாப்பிடக் கொடுக்கின்றார்.
அந்த நேரம் குழந்தைக்கு மருந்தெடுக்க ஹாஸ்பிட்டலுக்கு பொய்ட்டு வந்த வசுவும் கார்த்திக்கும் வருகின்றனர். அவர்களும் சேர்ந்து சாப்பிட்ட பின்னர் தமிழ் எல்லோரையும் ரெடி ஆகி நில்லுங்க 10 நிமிஷத்தில ஒரு இடத்திற்குப் போகனும் என்று சொல்ல, எல்லோரும் எங்க போகப்போறோம் என்று திரும்ப திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இருந்தாலும் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் என்று தமிழ் ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போகின்றார். அது புது வீடு என்று தெரிந்ததும் எல்லோரும் இந்த வீட்டில நாங்க இருக்க மாட்டோம். அந்த வீட்டிலையே எல்லோரும் சேர்ந்து இருப்போம் என்று கோதை, வசு எல்லோரும் சொல்கின்றனர்.அப்பேது தமிழ் நீங்க மட்டுமில்லை நாங்களும் தான் உங்களோடு சேர்ந்து இருக்கப்போகின்றோம் என்று சொல்கின்றார்.
இதைக் கேட்ட எல்லோரும் சந்தோசப்படுவதோடு, வீட்டுக்குள் சென்று வீட்டைச் சுற்றிப் பார்க்கின்றனர்.அப்போது நமச்சிக்கும் ஒரு ரூம் கட்டித் தருவதாக தமிழ் கூற நமச்சியும் சந்தோசப்படுகின்றார். அத்தோடு நடேசன் கோதையிடம் வீடு பிடித்திருக்கின்றதா எனக் கேட்கும் போது பிடிச்சிருக்கு என் பையனோட சம்பாத்தியத்தில வாழுறதே எனக்கு பெருமை தானே என்று கூறுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.
Listen News!