சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாகி வருவது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கேராளாவைச் சேர்ந்த பாடகியான சங்கீதா சஜித் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பாடகியான இவர் சிறு நீரகக் கோளாறு காலமாக இன்று தனது சகோதரியின் வீட்டில் உயிரிழந்துள்ளார்.
மேலும் இவர் தமிழில் ஏ. ஆர் ரகுமான் இசையமைத்த மிஸ்டர் ரோமியோ படத்தில் இடம் பெற்ற தண்ணீரைக் காதலிக்கும் என்ற பாடலை பாடியிருக்கிறார். அதே போல மதுமிதா தலைநகரம் லக்கிமேன் போன்ற படங்களிலும் பாடல்களைப் பாடியிருக்கின்றார்.
இது தவிர அனைத்து முன்னணி பாடகர்களுடன் வெளிநாட்டிலும் இசைக் கச்சேரி நடத்தியிருக்கின்றார். இறுதியாக பிருத்திவ் ராஜ் நடிப்பில் வெளியான குருதி படத்திலும் பாடியிருக்கின்றார் என்பதும் முக்கியமாகும்.
இந்த நிலையில் இவரின் இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்குவாரா உதயநிதி- கோரிக்கை வைத்த பிரபலம்
- அருள்நிதியின் அடுத்த படம் இது தான்-உறுதி செய்த பிரபல இயக்குநர்..!
- விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியாகிய சூப்பர் ஹிட் தகவல்- அட இத்தனை நிமிடங்களா?
- அட்டகத்தி தினேஷின் J பேபி திரைப்பட டீசரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஊர்வசி
- காட்டுப் பகுதிக்குள் ஆம்புலன்ஸின் உதவியோடு கடைசி கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்த விடுதலை படக்குழு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!