இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு படத்துக்கு அடுத்ததாக நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கினார். தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான கஸ்டடி நாக சைதன்யாவுக்கு முதல் நேரடி தமிழ் படமாக அமைந்தது. இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்த அந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 12) ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
போகப்போக படம் பிக்கப்பாகும் என எதிர்பார்த்த சூழலில் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர்.படம் வெளியான முதல் நாளில் வசூல் டல்லடிக்க சனி, ஞாயிற்று கிழமைகளில் வசூலில் முன்ன்னேறும் என படக்குழு நினைத்திருந்தது. ஆனால் அந்த நாள்களிலும் வசூலில் சொதப்பியது கஸ்டடி.
இந்நிலையில் படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்திருக்கும் சூழலில் வசூல் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. அதன்படி கஸ்டடி படமானது இதுவை பத்து கோடி ரூபாய்கூட வசூலிக்கவில்லையாம். படத்தில் நடிக்க நாக சைதன்யாவுக்கு பத்து கோடி ரூபாய் சம்பளம் என கூறப்பட்ட சூழலில் அந்தத் தொகையை கூட வசூலிக்க முடியாமல் கஸ்டடி மொரட்டு அடி வாங்கியிருக்கிறது.
வெங்கட் பிரபு அடுத்ததாக விஜய்யை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற தகவல் கோலிவுட்டில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. அந்தப் படம் மாநாடு படம் போலவே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும் என கூறப்படுவதால் விஜய் படத்தின் மூலம் வெங்கட் பிரபு மீண்டும் கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் ஒரு செய்தி உலாவிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!