சூர்யா 42 திரைப்படம் நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிக பெரிய பட்ஜெட் படமாகும், இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் ஏப்ரல் 14 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்படும் என்று ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் முழு முயற்சியில் இயக்குநர் சிறுத்தை சிவா ஈடுபட்டு வருகிறார். ஏனென்றால், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸில் லியோ படத்தையே முந்தியது, படத்தின் டைட்டில் கூட வெளியாகவில்லை, அதற்குள் சுமார் 500 கோடி ரூபாய்க்கு வியாபரம் ஆகியுள்ளதாம்.
தற்போது, ‘சூர்யா 42’ படக்குழு மீண்டும் ஒரு ஷெட்யூலுக்காக கோவா செல்கிறதாம். மேலும் அங்கு ஒரு முக்கிய காட்சியை படமாக்க பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறதாம்.
இந்த திரைப்படத்தில் சூர்யா 5 அவதாரங்களில் நடித்துள்ளார். அதாவது படத்தில் இடம்பெறும் வேங்கடார், அறத்தார், மண்டங்கர், முகத்தார், பெருமானார் என ஐந்து வேடங்களில் நடிக்கிறாராம். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படம் 2டி மற்றும் 3டியில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இது தவிர , இப்படம் உலகம் முழுவதும் 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!