• Sep 21 2024

முடிவிற்கு வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம்...? வேறொரு பேரில் அதிரடியாக களமிறங்கும் புதிய கதாபாத்திரம்... 'எதிர்நீச்சல்' சீரியலில் நடக்கவுள்ள டுவிஸ்ட்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்தவர் தான் நடிகர் மாரிமுத்து. அதில் அவரது எதார்த்தமான நடிப்பும், பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. அதன் காரணமாக அவர் சினிமாவில் அடைந்த பிரபலத்தைவிட சீரியல் மூலம் அதிகம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 


இவர் பேசும் வசனங்களை வைத்து சமூக வலைத்தளங்களிலும் பலரும் அவரை ட்ரெண்ட் ஆக்கினர். இந்தச் சூழலில் இவர் மாரடைப்பினால் சமீபத்தில் உயிரிழந்தார். அதாவது வளசரவாகத்தில் இருக்கும் டப்பிங் ஸ்டூடியோவில் சீரியலுக்கான டப்பிங்கை கொடுத்தபோது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு உயிரிழந்துள்ளார்.

இவரின் இறப்பைத் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் காலியாகவே இருந்து வருகின்றது. அந்தவகையில் மாரிமுத்துவின் தம்பி, வேல ராமமூர்த்தி, ராதாரவி, பசுபதி எனப் பலரது பெயர்கள் அடிபட்டாலும் உண்மையில் யார் அடுத்த ஆதி குணசேகரனாக நடிக்கப்போகிறார் என்ற உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. 


இந்த நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது எதிர்நீச்சல் சீரியலில் அதிரடி மாற்றத்தைக் கொண்டுவர சீரியல் குழுமத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் இதுவரையில் இருந்த ஆதி குணசேரகன் கதாபாத்திரத்தை வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார் என்பதோடு முடித்துவிட்டு, அதற்குப் பதிலாக புதிய கதாபாத்திரம் ஒன்றைக் கொண்டு வர முடிவு செய்துள்ளார்களாம்.


குறிப்பாக ஆதி குணசேகரனுக்குப் பதிலாக ஆதி பகவான் என்ற கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அவரை வைத்து எதிர்நீச்சல் சீரியலின் கதையை நகர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை இயக்குநர் இப்படி திடீரென முடித்து வைக்கின்றமை ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

Advertisement

Advertisement