பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத் தம்பி என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார் நடிகை பவானி.பிக் பாஸ் சீசன் 5-யில் கலந்து கொண்ட போது, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனி அந்த நிகழ்ச்சியில் தன்னுடன் இருந்த சக போட்டியாளர் அமீருடன் காதலில் இருப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்தார். இதனை அடுத்து இருவரும் தற்பொழுது லிவிங் ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்து வருகின்றனர்.
இருவரும் இணைந்து இறுதியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் அமீர் மற்றும் பாவனி சொந்தமாக புதிய கார் வாங்கியிருக்கின்றார்கள். இது குறித்த புகைப்படத்தை தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!