• Sep 20 2024

ரொமான்டிக் பார்வையால் கொஞ்சிக் குலாவும் அமீர்-பாவனி... இது எங்க போய் முடியப் போகுதோ தெரியலயே... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் பிரபலமான சேனல்களில் ஒன்று விஜய் தொலைக்காட்சி.  இதில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அதிகளவான பார்வையாளர்கள் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இதன் 5-ஆவது சீசன் இறுதியாக இடம்பெற்றிருந்தது. ஏனைய சீசன்களை போலவே இந்த சீசனிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை இன்றும் மறக்க முடியாது.



இதில் அதிகம் பேசு பொருளாக மாறியிருந்தவர்கள் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. இதனை ஆதரப்படுத்தும் வகையில் பல புகைப்படங்கள் நாளுக்கு நாள் வெளியாகிய வண்ணமே இருக்கின்றன.



அந்த வகையில் தற்போது பிக்பாஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சி ஆனது தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்ட் மூலம் தங்களுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை போட்டியாளர்கள் பலரும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.



இதில் கலந்து கொண்டுள்ள ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் அனைவருமே ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் என்பதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே இந்த டான்ஸ் நிகழ்ச்சிக்கும் அதிகளவான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.



இந்த நிகழ்ச்சிக்கு ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடன இயக்குநர் சதீஷ் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியாளர்களை ஊக்குவித்து வருகிறார்கள். பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை விட இரண்டாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் தான் எனப் பலரும் கூறி வருகின்றார்கள்.



அந்தவகையில் கடந்த வாரம் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பெண் கெட்டப்பில் வந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் மணக்கோலத்தில் போட்டியாளர்கள் வர உள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே பாவனி கழுத்தில் அமீர் தாலி கட்டுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதேபோன்று தாமரை தன்னுடைய கணவருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



இதனைத் தொடர்ந்து தற்போது அமீர் - பாவனி  இருவரும் ஜோடியாக கேரவனுக்குள் ரொமான்டிக் பார்வையால் கொஞ்சி குலாவும் போட்டோக்கள் வெளியாகியுள்ளன. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் "இது எங்கு போய்  முடிய போகிறதோ" என தமது ஆதங்கத்தினை கமெண்டுகளினால் வெளிப்படுத்தி வருகின்றனர்.




Advertisement

Advertisement