விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய சின்னத்தம்பி என்ற சீரியலில் பிரஜனுக்கு ஜோடியாக நடித்து பிரபல்யமானவர் தான் பாவனி ரெட்டி. கிராமத்து கதைக் களத்தில் அமைந்த இந்த சீரியலில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி முன்னணி நடிகையாகவும் கவரப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சன்டிவியில் ராசாத்தி என்னும் சீரியலில் நடித்து வந்தார் அதுவும் இடைநிறுத்தப்பட்டது. இதனால் சில காலம் சின்னத்திரையில் தலை காட்டாமல் இருந்த இவர் பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபல்யமானார்.
இவர் நிகழ்ச்சியில் தனது காதல் கணவர் தற்கொலை செய்து உயிரிழந்த விஷயத்தை கூறி மிகவும் வருத்தப்பட்டார். அது பலருக்கும் மிகவும் கஷ்டத்தை கொடுத்தது.
ஆனால் நிகழ்ச்சியை முடித்து வெளியே வரும்போது கொஞ்சம் சந்தோஷத்துடன் தான் வெளியே வந்தார். அத்தோடு பிக்பாஸ் 5வது சீசனில் மக்கள் பலருக்கும் அறிமுகம் இல்லாதவராக வந்தவர் நடன கலைஞர் அமீர்.
இப்போது இவர்கள் இருவரையும் தெரியாத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தங்களது சிறப்பான நடனத்தை வெளிக்காட்டி வந்தார்கள், டைட்டிலையும் வென்றார்கள், காதலர்களாகவும் ஆனார்கள்.இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இவர்களது திருமண பேச்சுக்கள் நடக்கும் இந்த நேரத்தில் இருவரும் இணைந்து புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்கள். அந்த காருடன் அமீர்-பாவ்னி போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
Listen News!