• Sep 20 2024

திலீப்பின் சூழ்ச்சி வலையில் சிக்கிய ஆர்த்தி.. எதிர்பாராமல் வீட்டிற்குள் நுழையும் செல்லம்மா.. இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் 'செல்லம்மா'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பங்களுடனும், வித்தியாசமான கதையம்சத்தைக் கொண்டும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இந்த சீரியலின் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் ஆர்த்தியை திலீப் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். உடனே ஆர்த்தி "என்ன திலீப் என் வீட்டிற்கு கூட்டிற்றுப் போறன் என்று சொல்லிவிட்டு உன் வீட்டிற்கு கூட்டிற்று வந்திருக்காய்" எனக் கேட்கின்றார். 


அதற்கு திலீப் "நீ தான் என் வீட்டுக்கு வந்ததே இல்லையே, முதன் முதலாக வந்திருக்காய் வலது காலை எடுத்து வைத்து வா" எனக் கூறி ஆர்த்தியை உள்ளே கூட்டிச் செல்கின்றார். பின்னர் ஆர்த்தியை இருக்க சொல்லி விட்டு ஜூஸ் போட்டு அதில் மயக்க மருந்தைக் கலந்து ஆர்த்திக்கு குடிக்க சொல்லிக் கொடுக்கின்றார்.

அதைக்குடித்ததும் ஆர்த்தி, இதைக் குடித்ததில் இருந்து எனக்கு மயக்கமாக வருகின்றது நான் கிளம்புகிறேன் எனக் கூறி எழும்புகின்றார். அதற்கு திலீப் போக வேண்டாம் எனக் கூறித் தடுக்கின்றார்.


அந்தசமயத்தில் வெளியே ஆர்த்தியின் செருப்பை பார்த்து விட்டு செல்லம்மா வீட்டிற்குள் வருகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement