தமிழ் சினிமாவில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் அப்பாஸ். இதனைத் தொடர்ந்து VIP, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, பூவேலி, படையப்பா, பம்மல் கே சம்பந்தம் என பல படங்களில் நடித்திருக்கின்றார்.
பின்னர் படவாய்ப்புக் கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகிய இவர் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் தனது குடும்பத்தினருடன் செட்டிலாகிவிட்டார் .அதுமட்டும் இல்லாமல் பைக் மெக்கானிக்காகவும் வேலை பார்த்து வருகிறாராம். இந்த நிலையில் அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.
அதில் தன்னுடைய கெரியர் மற்றும் வாழ்க்கை பற்றி பேசிய இவர் நடிகர் பிரசாந்த் பற்றியும் அதிர்ச்சி மிக்க தகவல் ஒன்றைக் கூறியுள்ளார். அதாவது அதாவது பிரசாந்த் எனக்கு நல்ல நண்பர் தான் எனக் கூறியுள்ள அப்பாஸ், அவரது நடிப்பை விமர்சித்துள்ளார்.
"பிரசாந்தின் நடனம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தாலும் அவரது நடிப்பு பெரிதாக கவரவில்லை. பிரசாந்த் அப்பா ஏற்கனவே திரையுலகில் பிரபலமாக இருந்தார். அதனால் அவருக்கு சினிமாவில் நடிக்க எளிதாக வாய்ப்புகள் கிடைத்தது, தன்னைப் போல் கஷ்டப்பட்டு வரவில்லை" என்றும் அப்பாஸ் கூறியுள்ளார்
திடீரென பிரசாந்த் மீது அப்பாஸ் இப்படி கோபம் கொள்ள என்ன காரணமோ என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.அதாவது பிரசாந்துக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம் ஜீன்ஸ். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், ராதிகா, ராஜூ சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பிரசாந்த் டபுள் ஆக்டிங்கில் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் அப்பாஸிற்கு தான் சான்ஸ் கிடைத்துள்ளது. ஆனல் அப்பாஸின் மேனேஜர் செய்த வேலையால் இந்த வாய்ப்பு பிரசாந்தை சென்றடைந்துள்ளதாம். ஒருவேளை ஜீன்ஸ் படத்தில் அப்பாஸ் நடித்திருந்தால் அவரது கேரியர் ஆட்டம் கண்டிருக்காது அதனால் தான் அவர் அப்படி சொல்லியிருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!