• Sep 21 2024

அபியை மூன்றாவது முறையாக திருமணம் செய்யும் வெற்றி- தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இது தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தது. அதாவது நாயகியின் விருப்பமில்லாமல் நாயகன் தாலி கட்டுவதாக புரோமோ வெளியாகியிருந்தது.

இதனால் அந்த சீரியல் ஆரம்பிக்கும் போதே பல எதிர்பார்ப்புக் காணப்பட்டது. அதனைப் பூர்த்தி செய்யும் விதமாகவே இந்த சீரியலும் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகின்றது. இதில் கதாநாயகனாக வினோத் பாபுவும் கதாநாயகியக பவித்ராவும் நடித்து வருகின்றனர்.


விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்தாலும் தற்பொழுது இருவரும் காதலித்து வருவதோடு இரண்டாம் முறையாகவும் தாலி கட்டிக் கொண்டனர். இந்த நிலையில் தற்பொழுது ஒளிபரப்பாகும் எப்பிஷோட்டில் அபி விபச்சார வழக்கில் மாட்டி விட்டார். ஆனால் அவர் வெற்றியை முறைப்படி திருமணம் செய்த எந்த வொரு ஆதாரமும் இல்லாததால் பல பிரச்சினைகளை சந்திக்கின்றார்.


இதனால் இரு வீட்டாரும் வெற்றியிடம் அபியை முறைப்படி திருமணம் செய்து கொள்ள சொல்கின்றனர்.அதற்கு வெற்றியும் உடன்படுகின்றார். எனவே அடுத்த வாரம் அபி வெற்றி திருமணம் நடைபெறும் என்று நம்பப்படுகின்றது.

Advertisement

Advertisement