• Sep 21 2024

சுடர் மீது வெற்றி வைத்திருக்கும் பாசத்தை கண்டு வியந்து போன அபி- வெற்றியைப் புரிந்து கொள்வாரா?- புதிய திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இதில் கண்மணி வெற்றியையும் அபியையும் எப்படியாவது பிரித்து விட்டு வெற்றியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வில்லத்தனமான வேலைகளை செய்து வருகின்றார்.

இப்படியான நிலையில் பொதுமக்களின் காணிப் பிரச்சினையை அபிக்கு எதிராக திருப்பி விடுவதோடு ராதாவையும் அபியையும் சண்டை மூட்டி விடுகின்றார். இது தான் சந்தர்ப்பம் என்று ராதாவின் கணவரும் பொதுமக்கள் மீது கற்களை எறிந்து காயப்படுத்தி விடுகின்றனர்.


அத்தோடு அடியாட்களை வைத்து அபியின் வீட்டின் மீதும் கற்களை வீசி எறிகின்றனர். இதனால் பயந்து போன வெற்றி அபியையும் சுடரையும் பாதுகாப்பாக வீட்டிற்குள் அனுப்பி வைப்பதோடு வீட்டிற்குள் சென்று சுடர் மீது ஏதும் கல்லெறி பட்டுள்ளதாக பார்க்கின்றார். இதனைப் பார்த்த அபி வியந்து போய் நிற்கின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement