• Sep 21 2024

சுடரைப் பார்ப்பதற்காக ஸ்கூலில் காத்திருந்த வெற்றி- திடீரென காணாமல் போன சுடர்- குழப்பத்தில் இருக்கும் அபி- கதறிய விஜியம்மா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் வெற்றிக்கு சுடர் தன்னுடைய பிள்ளை எனத் தெரிந்து விட்டது.இதனால்  வீட்டுக்கு வந்து யாரிடமும் சொல்லாமல் சுடரைப் பார்க்க ஸ்கூலுக்கு கிளம்பிச் செல்கின்றார். ஸ்கூல் வாசலில் பொம்மைகள் என பல கிப்டுக்களை வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்.

மறுபுறம் ராஜஷ்தானில் இருந்து வீட்டிற்கு வரும் போது வெற்றியின் நடவடிக்கைகள் சரியில்லை என யோசிச்சுக் கொண்டிருக்கும் அபி, சுடரை ஸ்கூலுக்கு போக விடாமல் தடுக்கின்றார். அத்தோடு விஜியம்மாவின் போனையும் வாங்கி வைப்பதோடு வீட்டிலிருக்கும் எல்லா லான் லைனையும் கட்டி விடச் சொல்கின்றார். அத்தோடு கபிலனைச் சொல்லி வீட்டிற்கு பாதுகாப்பையும் பலப்படுத்துகின்றார்.


மறுபுறம் வெற்றி வீட்டிலிருந்து சந்தோஷமாகக் கிளம்பியதைப் பொறுக்க முடியாத கண்மணி சித்தப்புவிடம் சென்று வெற்றி எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா என்று கேட்க அவர் வெற்றி ரொம்ப சந்தோஷமாக இருக்கிறான். எங்க போனாலும் என்னம்மா நிறைய நாளுக்கு பிறகு சந்தோஷமாக இருக்கிறானே அது போதாதா எனச் சொல்கின்றார்.

பின்னர் காரில் போய்க் கொண்டிருக்கும் போது அபி வெற்றிக்க உண்மை தெரரிஞ்சிருக்குமா, சுடரின் பேர்த் சேடிபிக்கெட்டை பார்த்திருப்பானா என நினைத்து தன்னுடைய ஹான்ட்பாக்கை பார்க்கின்றார். அதில் பேர்த்சேடிபிக்கெட் இருப்பதைப் பார்த்து வெற்றிக்கு உண்மை தெரிய வாய்ப்பே இல்லை என்று நினைத்து சந்தோஷ்படுகின்றார்.


தொடர்ந்து சிம்பாவுடன் பேசியே ஆகனும் என்று இருக்கும் சுடர் சிம்பாவிடம் பேசியே ஆகனும் என்று அடம் பிடிக்கின்றார். ஆனால் பேசமுடியவில்லை, வெற்றியும் சுடருக்காக காத்திருந்து சுடர் ஏன் ஸ்கூலுக்கு வரல என்று யோசித்துக் கொண்டிருக்கின்றார். இதனை அடுத்து அபி வீட்டுக்கு வரும் போது விஜியம்மா சுடரைக் காணவில்லை. யாரோ துாக்கிட்டு போய்ட்டாங்க என்று சொல்ல அபி அதிர்ச்சியடைகின்றார்.கபிலன் அது வெற்றியாகத் தான் இருக்கும் என்று சொல்ல இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement