• Sep 21 2024

கண்மணியின் சூழ்ச்சி தெரியாமல் வெற்றியை அரஸ் பண்ணிய அபி- கடும் கோபத்தில் வெற்றி- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பங்களோடு அட்டகாசமாக சென்று கொண்டிருக்கின்றது. 

அபியை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய வெற்றி தற்பொழுது சுடர் தன்னுடைய பிள்ளையா அல்லது அபி எடுத்து வளர்க்கும் பிள்ளையா என்பதை அறிய முயற்சி செய்து வருகின்றார்.


இது ஒரு புறம் இருக்க வெற்றியை எப்படியாவது திருமணம் முடித்தே ஆக வேண்டும் என்று கண்மணி பல சதி வேலைகளையும் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் இன்றைக்கான ப்ரோமோவில் வெற்றி சாராயம் காய்ச்சி விற்பதாக கண்மணி பணம் கொடுத்து அடியாட்களை செட் பண்ணி அபியிடம் போய் சொல்லும் படி சொல்கின்றார். இதனால் அபியும் அவர்களின் சொல்லைக் கேட்டு வெற்றியை அரஸ் பண்ணுகின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பது அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement