• Sep 21 2024

'தாமரை பார்த்த நாரதன் வேலையால தான் அபிராமி கிஸ் அடிச்சா'-முதல் முறையாக பேட்டியளித்த நிரூப்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் தான் நிரூப். இவர் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபற்றி இருந்தார். இந்த நிலையில் தற்பொழுது பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

அப்போது அவரிடம் நிகழ்ச்சி முடிந்து இத்தனை நாளும் ஏன் பேட்டி ஒன்றிலும் பங்குபற்றவில்லை என்று கேட்டபோது அம்மாவின் உடல் நிலை சரியில்லை அதனால தான் யாருடனும் பேச முடியவில்லை. இப்போது அம்மாவுக்கு ஓகே என்று கூறினார். அத்தோடு பிக்பாஸ் முடிஞ்சதுக்குப் பிறகு அல்டிமேட்டுக்கு போனது காரணம் பிடிச்சிருந்திச்சு எல்லாரையும் பற்றி அறியனும் என்று நினைச்சேன் அதான் போனேன் என்று கூறினார்.

பிக்பாஸ் சீசன் 5இல் அமீர் எனக்கு தடை என்று கூறினீங்க அல்டிமேட்டிலையும் அப்படி யாரும் உங்களுக்கு தடையாக இருந்தாங்களா என்று கேட்ட போது அப்பிடி எதுவும் இல்லை. எனக்கு நான் தான் தடையாக இருந்தேன். மற்றும் படி எதுவும் இல்லை. அத்தோடு ஜுலி கூட கெட்ட வார்த்தை வேணும் என்று பேசவில்லை அது கதைக்கும் போது அப்படி யே வந்தது தான்.

அதுக்கு பிறகு அவ கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்டேன் என்றார். அதே போல அனிதாவால் நான் கேம் சரியாக விளையாடாமல் எல்லாம் இல்லை. அவளுக்கு அப்படி ஒரு ஜடியாவும் இல்லை. எங்களுக்குள்ள நல்ல புரிதல் ஒன்று இருக்கு என்று கூறினார்.

மேலும் யாஷிகா கிட்ட நிறைய லவ் இருக்கு என்று பார்க்கும் போது தெரிஞ்சிச்சு அப்பிறம் எப்பிடி பிரேக் அப் ஆச்சு என்று கேட்ட போது அவ்வளவு பெரிய காரணம் எல்லாம் இல்லை. நமக்கு பிடிச்சவங்க கிட்ட சின்ன விசயத்துக்காக சண்டை போட்டு பேசாமல் இருப்போம். அப்பிடி தான் எனக்கு இது நடந்திச்சு. யாஷிகா அக்ஸிடன்ட் என்று கேள்விப் பட்ட போது முதல் பிராங் என்று தான் நினைச்சேன். அதுக்கப்பிறம் உண்மை என்று அறிந்தபோது கஷ்டமா தான் இருந்திச்சு என்று கூறினார்.

மேலும் கமல் சேர் வித்தியாசமாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார். அதே போல சிம்பு கொஞ்சம் பஃண்ணா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்று கூறினார். அபிராமியை கிஸ் பண்ணினதா சொல்லுறாங்களே அது உண்மையா என்று கேட்ட போது அது ஒரு கேம்ல தாமரை பார்த்த நாரதன் வேலை தான் என்று கூறினார்.

அதாவது தாமரை ஒரு ரீம் நாங்க ஒரு ரீம் அவங்க சொல்லுறதை நான் கேட்கனும். அப்படி இருக்கும் போது அபிராமியை தாமரை என்னோட கன்னத்தில கிஸ் பண்ண சொல்லிட்டா. அவளும் வந்து கிஸ் பண்ணிட்டா மற்றும் படி எதுவும் இல்லை அவ்வளவு தான் என்று கூறி இந்த பேட்டியை முடித்துக் கொண்டார்.

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement