இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிய ஆபத்துதவிகளை தூண்டிவிட்டு, ஆதித்த கரிகாலன் மீதான தன் பழைய வஞ்சத்தை தீர்த்துகொள்ள நந்தினி செய்யும் சூழ்ச்சியும் அதனால் சோழ அரியணைக்கு வரும் ஆபத்தும், இதை எதிர்கொள்ள, தான் விரும்பும் வந்தியத்தேவன் மூலம் இலங்கையில் உள்ள தன் சகோதரனும் பொன்னியின் செல்வனுமான அருள்மொழிவர்மனுக்கு செய்தி அனுப்புகிறார் சோழ இளவரசி குந்தவை.
நந்தினியின் சூழ்ச்சி எப்படி சோழர்களால் முறியடிக்கப்படுகிறது? நந்தினி திருந்தினாரா? ஆதித்த கரிகாலன் என்ன ஆகிறார்? ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்குமான பிரச்சனைக்கு பின்னணி தெளிவானதா? என்பதை நோக்கி இப்படத்தின் 2-ஆம் பாக கதை பயணிக்கிறது.
இந்நிலையில், நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் கமல்ஹாசன், ரேவதி, குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
முன்னதாக இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்று பேசியபோது, “இங்கு வந்திருக்கும் ரசிகர்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி. முதல் நாள் கேமரா முன்னாள் நின்றது முதல் இன்று வரை நான் மணி ரத்னம் அவர்களின் மாணவியே. மேலும், பல படங்களில் என்னை அவர் இயக்கிவிட்டார். ஆனாலும் அது போதாது. இப்படத்தில் என்னுடன் நடித்திருக்கும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத் குமார், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா அனைவருக்கும் நன்றி. மேலும், இப்படத்தில் திரைக்கு பின்னால் வேலை செய்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி” என்றார்.
Listen News!