• Sep 20 2024

'தி கேரளா ஸ்டோரி' படத்தால் சிக்கலில் மாட்டிய நபர்... கொலை மிரட்டலோடு மர்ம நபர்கள் தாக்குதல்.. போலீசார் எடுத்த அதிரடி முடிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இருப்பினும் இந்த படம் பல தடைகளைத் தாண்டித் தான் வெளிவந்திருக்கின்றது.

அதாவது கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதனால் இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்ததோடு, பல எதிர்மறையான விமர்சனங்களும் கிளம்பின.


அந்தவகையில் சர்ச்சைக்கு மத்தியில் இப்படம் கடந்த மே 05ஆம் தேதி நாடு முழுவதும் வெளியானது. இந்த நிலையில் ராஜஸ்தானில் இப்படத்துக்கு சமூக வலைதளத்தில் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த நபர் ஒருவர் மீது சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் உறுப்பினரான அந்த நபர் அளித்துள்ள புகாரில் "கடந்த சனிக்கிழமை (மே 07) அன்று இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, தன்னை மூன்று மர்ம நபர்கள் தடுத்து நிறுத்தி தாக்கியதாகவும், தன்னை ''கொன்று விடுவோம்'' என்று மிரட்டியதாகவும்" கூறியுள்ளார்.


மேலும் இதற்கு முன்னதாக அந்த நபர் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை பொதுமக்கள், குறிப்பாக இளம் பெண்கள் பார்க்க வேண்டும் என்று பதிவிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement