சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் அருண்விஜய் . இயற்கை, மலை மலை போன்ற படங்களில் நடித்திருந்தாலும் நல்ல வரவேற்பு திரைப்படங்களில் கிடைக்கவில்லை. ஆனாலும் தனது தொடர் முயற்சியால் மிகப் பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை தற்போது பெற்றுள்ளார்.
2015 அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற படம் மூலம் திரையுலகில் வில்லனாக ரி-என்ரி கொடுத்தார்.
தொடர்ந்து குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், சகோ போன்ற அதிரடியாய் நடித்த படங்களில் கிடைத்த வெற்றியினால் பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பதை விட சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். இதைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இதில் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் இணைய உள்ளார்.
தற்போது இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் இப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் அருண் விஜய்க்கு பிடித்துப்போய் உள்ளதாகவும் படத்தில் நடிக்க உடனடியாக ஒப்புக்கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- போஸ்டர் மட்டும் காப்பி அடித்தார்களா?அல்லது படத்தில் காட்சிகளையும் காப்பி எடுத்தார்களா?-எஸ். கே20 படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்
- “கார்த்தி மாதிரி நாகரீகமான எந்த நடிகரையும் நான் பார்த்ததில்லை“- விஜய் பட நடிகர் பாராட்டு
- கடன் பிரச்சினையால் தான் நடிக்கவே வந்தேன்-நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சித் தகவல்
- அடேங்கப்பா-நயன் விக்கி திருமணத்தில் பங்கு கொண்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு – தீயாய் பரவி வரும் புகைப்படம்..!
- நடிகர் விஜய்யை அப்படி கூப்பிட்டதற்கு இது தான் காரணம்-கமல்ஹாசன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!